Wednesday, January 25, 2012

மொழிப்போர் தியாகிகள் தினம்


மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று (25.12.2012) விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார். வடசென்னை மூலகொத்தளத்தில் அமைத்துள்ள  நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். இந்நிகழ்வில் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் திரண்டு வந்து தலைவருடன் பங்கேற்றனர்.
வீரவணக்க நிகழ்விற்கு பின்னர் நினைவிடத்திலேயே செய்தியாளர்கள் தலைவரை சந்தித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பின் திருநங்கைகள் தலைவரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் கபிலன்,வன்னிஅரசு,எழில்கரோலின் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More