Friday, January 20, 2012

நாகூர் நகர செயலாளர் தோழர் ரங்கையன்,சாதி இந்துக்களால் படுகொலை


17.01.2012 விடுதலைச் சிறுத்தைகளின் நாகூர் நகர செயலாளர் தோழர்  ரங்கையன்,சாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டார்.தோழர் ரங்கையன் நாகூர் பகுதிகளில் பல காலமாக சாதி இந்துக்களை எதிர்த்து தலித் மக்களுக்கு அரணாக இருந்து வந்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாளன்று நாகூரில் முதன்முதலாக புரட்சியாளரின் சிலையை அண்ணன் திருமா முன் திறக்க அறிவித்திருந்தார்..இதுவும் இக்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது ...இவருக்கு முன் நகர செயலாளராக இருந்த தோழரும் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது...இவர் மீது கடந்த வருடம் நவம்பர் மாதம் நீதிமன்ற வளாகத்திலேயே கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது .காவல் துறையில் புகார் செய்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்...

நேற்றைய(17.01.2012) படுகொலை காரைக்காலில் நடந்துள்ளது...தலை முழுதும் சம்பட்டியால் அடித்து சிதைக்கப்பட்டுள்ளது...இது வரை காவல் துறையினர் யாரையும் கைது செய்யவில்லை ..சாதி இந்துக்களுக்கு ஆதாரவான போக்கே கடைபிடிக்கப்பட்டு வருகிறது ..நாகூர் பகுதி முழுவது கடைகள் அடைக்கப்பட்டு பதற்றம் நிலவி வருகிறது .

சாதி ஒழிப்பு மற்றும் தமிழ் தேசிய களத்தில் தொடர்ந்து போராடிய சாதி ஒழிப்பு போராளி  தோழர் ரங்கையனுக்கு வீரவணக்கம் ! வீரவணக்கம் !!கண்டனம் கூட தெரிவிக்காத தமிழ் தேசியவாதிகளே ,மனித உரிமை ஆர்வலர்களே எங்கே? எங்கே?

- பாலசிங்கம்

தோழர் ரங்கையனின் இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கான சிறுத்தைகள் அஞ்சலி செலுத்தினர்


0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More