Thursday, December 24, 2009

புதிய திட்டங்களால் பயன்பெறும் ஏழை எளிய மக்கள் அளித்த பாராட்டுச் சான்றிதழ்! -தொல். திருமாவளவன்

இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி!
புதிய திட்டங்களால் பயன்பெறும்
ஏழை எளிய மக்கள் அளித்த பாராட்டுச் சான்றிதழ்!

தொல். திருமாவளவன் றிவிப்பு

ண்மையில் நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க. ரசின் சாதனைகளுக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.

குறிப்பாக, ஏழை எளிய மக்கள் பயன்பெறத் தக்க வகையில் தமிழக ரசு றிவித்துள்ள புதிய திட்டமான "கலைஞர் காப்பீடு திட்டம்' வெகுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வாறான மக்கள் நலத் திட்டங்களுக்கு தமிழக மக்கள் ளித்துள்ள பாராட்டுச் சான்றிதழாகவே இந்த மகத்தான வெற்றிகள் விளங்குகின்றன.

ஆளும் கட்சிக்கு ஈடுகொடுத்துச் செயல்படவோ, எதிரான விமர்சனங்களை முன்வைக்கவோ வலிமை பெற்ற கட்சியாக .தி.மு.க. இயங்கவில்லை என்பதை இந்த முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.


கூட்டணிக் கட்சிகளை ரவணைத்தும் பொதுமக்களின் நன்மதிப்பை வென்றெடுத்தும் வெற்றிகளைக் குவிப்பதில் கலைஞருக்கு கலைஞர்தான் என்பதை மறுபடியும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இந்த வெற்றியால் கூட்டணி கட்சி என்கிற முறையில் விடுதலைச் சிறுத்தைகளும் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

உங்கள் கருத்தை தெரிவிக்க

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO