Sunday, December 20, 2009

தலித் வரலாற்று நூல் வரிசை வெளியீடு


மதுரையில் தலித் வரலாற்று நூலின் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியினை வெளியிட்டார்.


நூற்றாண்டுகளை கடந்து நிற்கும், தலித் வரலாற்று ஆவணங்கள் முதல் முறையாக தமிழில் நூலாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெளியிட்டு விழா மதுரையில் நேற்று (19.12.2009) நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நூலின் முதல் பிரதியினை வெளியிட, அதனை முஸ்லீம் முன்னேற்றக்கழக தலைவர் ஜபகருல்லா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார். பேராசிரியர் திராவிடர் ராணி, கவிஞர் தேவேந்திரபூபதி, பாரிச்செழியன், அருள், தியான்சந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

.

உங்கள் கருத்தை தெரிவிக்க

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO