இசைஞானி இளையராஜா அவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து# திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு# சினிமாவை பார்த்து ஏமாறும் காலம் அல்ல: விஜயகாந்த்தின் முதல்வர் கனவு பலிக்காது# தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல்.திருமாவளவன் அறிவிப்பு# இந்திய-இலங்கை அதிபர் தேர்தல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைச்சிறுத்தைகளும்!# கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? -வன்னிஅரசு மாநிலச் செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள் # ''தம்பி உயிரோடு இருக்கிறார்... கனடாவில் என்னை சந்திப்பார்!'' - ஜூ.வி நேர்காணலில்..திருமா# அமரர் வேலுப்பிள்ளைக்கு - தொல்.திருமாவளவன் இறுதி அஞ்சலி#ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! திரு. வேலுப்பிள்ளை - தொல். திருமாவளவன் அறிக்கை #தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு! - திருமா அறிக்கை # இரண்டாம் ஆண்டில் www.thiruma.in # இராமன் மிகப்பெரிய பயங்கர‌வாதி நாடாளுமன்ற அவையில் திருமா பேச்சு # ஈழத்தமிழர் பிரச்சனை 10 கோடி தமிழர்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை -பாராளுமன்றத்தில் திருமா உரை #

Monday, December 7, 2009

இடைத்தேர்தலில் திருமாவளவன் தீவிர பிரச்சாரம்

திசம்பர் 9 திருச்செந்தூர், திசம்பர் 10 வந்தவாசி
இடைத்தேர்தலில் திருமாவளவன் தீவிர பிரச்சாரம்

எதிர்வரும் திசம்பர் 19 அன்று நடைபெறவுள்ள திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்றாலும் மிகவும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் இரு வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும். தி.மு.க. அரசு அடித்தட்டு மக்களுக்காகவும், நடுத்தர மக்களுக்காகவும் ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக, அண்மையில் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறையில் இருந்து வரும் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றி மிக எளிதானது என்பதை அறிவோம். எனினும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பது கூட்டணி கட்சி என்கிற முறையில் விடுதலைச் சிறுத்தைகளின் கடமையாகும். ஆகவே, இரு தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், வரும் திசம்பர் 9ஆம் நாள் திருச்செந்தூர் தொகுதியிலும், திசம்பர் 10ஆம் நாள் வந்தவாசி தொகுதியிலும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். விடுதலைச் சிறுத்தைகள் உரிய ஏற்பாடுகளை ஆங்காங்கே கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
திருமாவளவன்.

உங்கள் கருத்தை தெரிவிக்க

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO