இசைஞானி இளையராஜா அவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து# திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு# சினிமாவை பார்த்து ஏமாறும் காலம் அல்ல: விஜயகாந்த்தின் முதல்வர் கனவு பலிக்காது# தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல்.திருமாவளவன் அறிவிப்பு# இந்திய-இலங்கை அதிபர் தேர்தல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைச்சிறுத்தைகளும்!# கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? -வன்னிஅரசு மாநிலச் செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள் # ''தம்பி உயிரோடு இருக்கிறார்... கனடாவில் என்னை சந்திப்பார்!'' - ஜூ.வி நேர்காணலில்..திருமா# அமரர் வேலுப்பிள்ளைக்கு - தொல்.திருமாவளவன் இறுதி அஞ்சலி#ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! திரு. வேலுப்பிள்ளை - தொல். திருமாவளவன் அறிக்கை #தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு! - திருமா அறிக்கை # இரண்டாம் ஆண்டில் www.thiruma.in # இராமன் மிகப்பெரிய பயங்கர‌வாதி நாடாளுமன்ற அவையில் திருமா பேச்சு # ஈழத்தமிழர் பிரச்சனை 10 கோடி தமிழர்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை -பாராளுமன்றத்தில் திருமா உரை #

Sunday, October 18, 2009

தேர்தலுக்குபின் அதிமுக, பாமக, மதிமுக மவுனம் ஏன் திருமாவளவன் கேள்வி?

மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இலங்கை தமிழர்கள் குறித்து பேசாதது ஏன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வடபழனி பெ.ஜெயபால் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணையும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை அசோக் நகரில் உள்ள அண்ணா சமூகநலக்கூடத்தில் நடைபெற்ற விழாவில் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் முன்னிலையில் அவர்கள் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்தவர்களை வாழ்த்தி வரவேற்ற திரு.தொல்.திருமாவளவன் பின்னர் விழாவில் பேசும் போது, மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இலங்கை தமிழர்கள் குறித்து பேசியதுண்டா என்று கேள்வி எழுப்பினார். தேர்தலுக்கு முன்பு ஒரு முறை போராட்டம் நடத்திய செல்வி ஜெயலலிதா, தேர்தலுக்கு பிறகு ஒரு முறையாவது பேசியதுண்டா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது என்று மக்களவையில் தாம் பேசியதாக குறிப்பிட்ட அவர், இலங்கை தமிழர்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று தாம் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டினார். இலங்கை பயணத்தின்போது முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களை சொந்த இடங்களில் குடியமர்த்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். இலங்கை பயணத்தின்போது டக்ளஸ் தேவானந்தா தமது அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் கொச்சைப்படுத்தியதாக அவர் கூறினார். திருமாவளவன் யார் என்பது எதிரியான ராஜபக்சேவுக்கு தெரிகிறது என்றும் ஆனால் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தெரியவில்லையே என்றும் அவர் தெரிவித்தார். ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டே இலங்கை தமிழர்களுக்கு தாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சியினர் வாய் மூடி மவுனியாக இருப்பதாகவும் அவர் கூறினார். அதிமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் இலங்கை தமிழர்களுக்காக மக்களவையில் ஒரு முறையாவது பேசியதுண்டா என்று அவர் கேள்வி எழுப்பினார். தாம் இலங்கை சென்றிருந்த போது அவை நாகரிகம் கருதியே தம்முடைய முழு உணர்ச்சிகளையும் வெளிகாட்ட முடியவில்லை என்று அவர் கூறினார். இலங்கையில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமை தாம் படம்பிடித்துள்ளதாகவும் திரு. திருமாவளவன் தெரிவித்தார்.

.

உங்கள் கருத்தை தெரிவிக்க

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO