இசைஞானி இளையராஜா அவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து# திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு# சினிமாவை பார்த்து ஏமாறும் காலம் அல்ல: விஜயகாந்த்தின் முதல்வர் கனவு பலிக்காது# தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல்.திருமாவளவன் அறிவிப்பு# இந்திய-இலங்கை அதிபர் தேர்தல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைச்சிறுத்தைகளும்!# கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? -வன்னிஅரசு மாநிலச் செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள் # ''தம்பி உயிரோடு இருக்கிறார்... கனடாவில் என்னை சந்திப்பார்!'' - ஜூ.வி நேர்காணலில்..திருமா# அமரர் வேலுப்பிள்ளைக்கு - தொல்.திருமாவளவன் இறுதி அஞ்சலி#ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! திரு. வேலுப்பிள்ளை - தொல். திருமாவளவன் அறிக்கை #தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு! - திருமா அறிக்கை # இரண்டாம் ஆண்டில் www.thiruma.in # இராமன் மிகப்பெரிய பயங்கர‌வாதி நாடாளுமன்ற அவையில் திருமா பேச்சு # ஈழத்தமிழர் பிரச்சனை 10 கோடி தமிழர்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை -பாராளுமன்றத்தில் திருமா உரை #

Wednesday, March 10, 2010

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா உள்ஒதுக்கீடு உடனே வேண்டும்!” - தொல்.திருமாவளவன் கோரிக்கை

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா
ஒதுக்கீடு இப்போதே வேண்டும்!
உள்ஒதுக்கீடு உடனே வேண்டும்!”

தொல்.திருமாவளவன் கோரிக்கை

சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா கடந்த மார்ச் 8 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 1996ஆம் ஆண்டிலிருந்து மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் இம்மசோதாவை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெற இயலாத நிலையில் தேக்கமடைந்திருந்தது. தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குரிய உள்ஒதுக்கீட்டு சட்டப்படி உறுதிசெய்யப்பட வேண்டும் என்னும் ஞாயமான கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதன் காரணமாக இம்மசோதா நிறைவேற்றப்பட முடியாத நிலையிலிருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அன்றைய பாராதிய சனதா அரசானாலும் சரி, இன்றைய காங்கிரஸ் அரசானாலும் சரி, தயக்கம் காட்டுவது ஏன் என்று விளங்கவில்லை.



Tuesday, March 9, 2010

இந்துதுவத்தை வேரறுப்பதில்தான் பெண் விடுதலை அமைந்திருக்கிறது - மகளிர் மாநாட்டில் திருமாவளவன்

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைநிலை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் 08.03.10 மகளிர் தினத்தில் நெல்லையில் ”உழைக்கும் மகளிர் மாநாடு”  நடைப்பெற்றது. நெல்லையில் சவகர் அரங்கத்தில் கூட்டப்பட்டிருந்த இம்மாநாட்டுக்கு  ஏராளமான மகளிர் திரண்டிருந்தனர். நெல்லை நகரே நெரிசலில் திக்கி திணறியது. கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் பங்கு கொண்ட மாநாட்டுக்கு மகளிர் விடுதலை இயக்க மாநில செயலாளர் நற்சோனை அவர்கள் தலைமை தாங்கினார். 



Sunday, March 7, 2010

கடலூர் மாவட்ட வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

சிதம்பரம், மார்ச் 6:  கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

Friday, March 5, 2010

ஏழை எளிய மக்களை கடுமையாக பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை இந்திய அரசு திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்.



-
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொது பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெறக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி சென்னை அரசினர் மருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Tuesday, March 2, 2010

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் 3பேர் பலி: நீதி விசாரணை நடத்தவேண்டும்! - தொல்.திருமாவளவன் அறிக்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் துறையில் பயின்ற வடஇந்திய மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி பலியாகியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த வட இந்திய மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனை அலுவலகத்தைத் தாக்கியுள்ளனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் அம்மாணவர்களை அப்புறப்படுத்துகிறோம் என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதனால் அலறி அடித்துக்கொண்டு தப்பிஓட முயன்ற மாணவர்கள் அருகில் உள்ள ஓடையில் விழுந்து மூழ்கி மூன்று பேர் இறந்துள்ளனர். மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர். அவர்களின் நிலை என்னவென்பதும் இன்னும் உறுதிப்படவில்லை. காவல்துறையின் கட்டுப்பாடிழந்த போக்கால் இந்த அளவில் உயிர்ச்சேதம் நிகழ்ந்துள்ளது. அம்மாணவர்கள் வட இந்தியர்கள் என்பதனால் இந்த அவலத்தை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளிவிட முடியாது.


Monday, March 1, 2010

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மார்ச் 5ஆம் நாள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெறக்கோரி
சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தொல். திருமாவளவன் அறிக்கை


இந்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக, தலித் மக்கள் மிகவும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்துக் குரல் எழுப்பி வருகின்றனர். அதேவேளையில் ஆளும் கட்சிக் கூட்டணியிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.



Sunday, February 28, 2010

'இந்தியதேசியத்திற்கு மாற்று தமிழ் தேசியம்தான்' - எழுச்சித்தமிழர் பேச்சு

27.02.10 சனிக்கிழமை அன்று சென்னையிலுள்ள தேவ நேய பாவாணர் அரங்கத்தில் தாய்மண் வெளியீட்டகம் சார்பில் எழுச்சித்தமிழர் தொல்,திருமாவளவன் தலைமையில் திரு தணிகைச்செல்வன் அவர்களின் நுால்கள் வெளியீட்டு விழா நடைப்பெற்றது. நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்தவர்களை திரு.நீல.தமிழேந்தி வரவேற்று சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தோழர் வன்னியரசு அவர்கள் பதிப்பாளர் உரை நிகழ்த்திய பின் \'தமிழினதிரட்சியும் தாயக மீட்சியும்\' எனும் அரசியல் நூலை மூத்த பத்திரிகையாளராகிய திரு.சின்னக்குத்தூசி அவர்கள் வெளியிட பேராசிரியர் சுபவீரபாண்டியன் பெற்றுக்கொள்வதாக இருந்து அவர் நிகழ்ச்சிக்கு வர இயலாததால் திரு. வா.சே.குழந்தைசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.


  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO