Friday, September 3, 2010

செய்தித்தொடர்பாளர்கள் கூட்டம்

செப்டம்பர் 1, சென்னை

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செய்தித்தொடர்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜய் பார்க் ஓட்டலில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விவரம் ...

 விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் ஈழ இறையாண்மை மாநாடு அக்டோபர் மாதம் 10-ந்தேதி சென்னையில் நடக்கிறது. தமிழ் ஈழ விடுதலை போராட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆனாலும் தமிழ் ஈழத்தின் கோரிக்கை இன்னும் நீர்த்து போக வில்லை.
 

Wednesday, August 25, 2010

நடிகர் ரஜினிகாந்த் எழுச்சித்தமிழர் சந்திப்பு




இன்று (25-08-2010) காலை 11.30 மணியளவில் சென்னை வேளச்சேரி தாய்மண் அறக்கட்டளை அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கினார்






Monday, August 23, 2010

"தமிழர் இறையாண்மை மாநாடு " - தொல்.திருமாவளவன் அறிவிப்பு

அக்டோபர் 10
தமிழர் இறையாண்மை மாநாடு
தொல்.திருமாவளவன் அறிவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக ஆகத்து 17 தமிழர் எழுச்சிநாளில் தமிழ் இனம், தமிழ் மொழிகுறித்து விழிப்புணர்வூட்டும் வகையிலான மாநாடுகள் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில்நடத்தப்பட்டு வந்தன. கடந்த ஆண்டு ‘எழும் தமிழ் ஈழம்’ என்னும் மாநாடு மிகச் சிறப்பாக சென்னையில் நடைபெற்றது. அதைப்போல இந்த ஆண்டு ஆகத்து 17 அன்று ‘தமிழர் இறையாண்மை’ மாநாடு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தந்தை தொல்காப்பியன் அவர்கள் காலமானதையொட்டி அம்மாநாடு திட்டமிட்டபடி நடத்தவியலாமல் போய்விட்டநிலையில், எதிர்வரும் செப்டம்பர் 26 அன்று சென்னையில் நடத்துவதென அறிவிக்கப்பட்டது.

Wednesday, August 18, 2010

தொல்.திருமாவளவன் தலைமையில் மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் புதுதில்லியில் ஆர்ப்பாட்டம்

தொல்.திருமாவளவன் தலைமையில்
மதுரை வழக்கறிஞர்கள் சங்கத்தினர்
புதுதில்லியில் ஆர்ப்பாட்டம்

அன்னைத் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்து வருகிற இச்சூழலில் அதற்கு ஏதுவான வகையில் ஆட்சியதிகாரக் கட்டமைப்புத் தளங்கள் அனைத்திலும் தாய்த்தமிழுக்குரிய ஆளுமையை நிலைநாட்ட வேண்டியது மிகவும் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். நீதித் துறை, நிர்வாகத் துறை, சட்டத் துறை என அனைத்துத் துறைகளிலும் தமிழக அளவில் தமிழ் ஆட்சி செய்ய வேண்டும் என்பது இந்திய அளவில் தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதாக அமையும்.

Tuesday, August 17, 2010

தமிழர் எழுச்சி நாள்

Monday, August 9, 2010

டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க! - தொல்.திருமாவளவன் கோரிக்கை


டாஸ்மாக் ஊழியர்களை
பணி நிரந்தரம் செய்க!

தொல்.திருமாவளவன் கோரிக்கை

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்கக்கோரி நீண்ட காலமாக வற்புறுத்தி வருகின்றனர். பட்டதாரி இளைஞர்கள் தங்களுக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காத நிலையில் அரசு மதுக்கடைகளில் பணியில் சேர்ந்து தொகுப்பூதியம் பெற்று தங்களது குடும்பத்தினரைக் காப்பாற்றி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 35 வயதைக் கடந்திருக்கின்றனர்.

இத்தகைய சூழலில் அவர்களால் இனி வேறு வேலைவாய்ப்பையும் தேடமுடியாத இக்கட்டில் உள்ளனர். ஆகவே, அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடுமாறு விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, July 23, 2010

தாமிரபரணி படுகொலை நினைவு - எழுச்சித்தமிழர் அஞ்சலி

கூலி உயர்வு கோரி தாமிரபரணிக் கரையில் ஆர்பாட்டம் நடத்திய மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை காவல்துறையினர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாகச் சுட்டு உயிர்குடித்த நாளையொட்டி இன்று (23.07.2010) பிற்பகல் 3.20 மணியளவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தாமிரபரணிப் போராட்டத்தில் உயிரிழந்த ஈகியருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO