Tuesday, December 15, 2009

இரண்டாம் ஆண்டில்....



ணையதள நண்பர்களின் பேராதரவோடு இந்த தளம் தனது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..

இருபத்தைந்து ஆண்டு கால அரசியல் வாழ்வில்,எத்தனை எத்தனை இடர்களையும், இருடடிப்புகளையும் எமது கட்சி கடந்து வந்திருகின்றது. எத்தனை எத்தனை போரட்டங்கள் நடத்தினாலும் அதை பல ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து எமது போரட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தடை கற்களாய் இருந்த சமயத்தில், இளையோர் மத்தியிலும்,இணையத்தின் வாயிலாக எமது செய்திகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த ஆண்டு இந்த தளமானது www.tholthiruma.blogspot.com என்று இயங்கி வந்தது பின்னர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுது பிறந்த நாளில் www.thiruma.in என்ற முழு இணைய தளமாக செயல் பட்டு வருகிறது .

இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எமது தளத்தை ஒரு போராட்ட களமாய் மாற்றிட பெரும்பாடுபட்ட நண்பர்களுக்கும், இணையவாசிகளுக்கும், பதிவர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கும், ஈழ தமிழர்களுக்கும், போராளிகளுக்கும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் அனைவருக்கும், எமது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் பல்வேறு புதிய செயல்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை இந்நேரத்தில் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.



Monday, December 14, 2009

தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு!

தமிழீழமே தீர்வு:
தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு!


உலகெங்கும் பரந்துவாழுகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தங்களுக்கான ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ தொடர்பாக ஆங்காங்கே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்திவருகின்றனர். அத்துடன், ஈழத்தந்தை செல்வா, காலத்தில் நிறைவேற்றப்பட்ட ‘வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை’ ஆதரிக்கும் வகையில் இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களின் மனநிலையை அறியும்பொருட்டும் ‘பொதுவாக்கெடுப்பு’ நடந்து வருகிறது.

அண்மையில் நார்வே மற்றும் ஃபிரான்சு ஆகிய நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வாக்களித்துள்ளனர். நார்வேயில் 98 விழுக்காடு மற்றும் ஃபிரான்சில் 99 விழுக்காடுஅளவிலும் பொதுமக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர். அதாவது, ஈழத்தமிழர்களுக்கு நிலையான பாதுகாப்பு தமிழீழ விடுதலை மட்டுமே என்பதை மீண்டும் மக்கள் இத்தகைய வாக்கெடுப்பின் மூலம் மறுஉறுதி செய்துள்ளனர். ஈழச்சிக்கலுக்கு ஒரே தீர்வு - இறுதித் தீர்வு தமிழர்களின் இறையாண்மையினைப் பாதுகாப்பதற்கான தமிழீழ விடுதலை மட்டுமே!

இத்தனை இழப்பிலும் ஈழமக்கள் சோர்வடையாமல், சலிப்படையாமல், தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளனர்.

சிங்கள அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த ஆறுதலையளிக்கிறது. ஈழத்தமிழினத்தின் இந்த உறுதிமிக்க உணர்வுகளை- விடுதலைவேட்கையை, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் யாவும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தமிழீழத் தேவையை இந்திய அரசு புரிந்து கொள்வதோடு அதனை அங்கீகரிக்கவும் முன்வரவேண்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை - நாடுகடந்த தமிழீழ அரசை விடுதலைச்சிறுத்தைகள் முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது. அத்துடன், தமிழகத்திலும் அத்தகைய பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் முன்முயற்சிகளை மேற்கொள்ளும்!


இவண்
தொல்.திருமாவளவன்

அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் - எழுச்சித் தமிழர் வலியுறுத்தல்



சென்னையை அழகு படுத்துகிறோம் என்கிறப் பெயரில் தாழத்தப்பட்ட மக்களை சென்னையிலிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 14.12.09 அன்று காலை 11.00 மணியளவில் சென்னை மொரியல் அரங்கம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டம் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.கட்சியின் மையச் சென்னை மாவட்டச் செயலாளர் க.வீரமுத்து அவர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். பொதுச்செயலாளர் து.ரவிக்குமார், தலைமைநிலையச் செயலாளர்கள் ஏ.சி.பாவரசு, வன்னியரசு, தலைவரின் தனிச்செயலாளர் கு.பாவலன், கருத்தியல் பரப்புச் செயலாளர் கெளதம சன்னா, ஊடகப்பிரிவின் மாநிலச் செயலாளர் செ.அறிவமுதன், மாவட்டச் செயலாளர்கள் கபிலன், இளஞ்செழியன், விடுதலைச்செழியன், உள்ளிட்ட பல முன்னணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

நிறைவாகப் பேசிய தொல்.திருமாவளவன் அவர்கள் சிங்காரச் சென்னை என்கிறப் பெயரில் தாழத்தப்பட்ட மக்களை சென்னையிலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்றும், கூவம் நதிக்கரையில் அப்புறப்படுத்திய குடிசை வாசிகளுக்கு சென்னையிலேயே அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக்கொடுக்க வலியுறுத்தியும், வீட்டு மனைப்பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரியும் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைத்து மக்களை அழிவு நிலையிலிருந்து காப்பாற்றக் கோரியும், ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் கழிப்பிட வசதி, சாலை வசதி, சுடுகாட்டு பாதை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டியும், ஆதி திராவி மக்களின் நிலப்பிரச்சனையில் காவல்துறையை ஏவி அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தி பேசினார்.
-

Tuesday, December 8, 2009

இராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி நாடாளுமன்ற அவையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு



மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக்கவனித்து கொண்டிருக்கிறது .

இந்த விவாதங்களுக்குப்பின்னர் ,அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் வழக்கமான கமிசன் அறிக்கைகளை போல இதுவும் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுவிடுமோ என்கிற அய்யமும் பொதுமக்களிடையே உள்ளது.எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ,பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.



ஊருக்குத்தெரிந்த உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான் ,17ஆண்டுகளுக்குப்பிறகு ,லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார் .இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்சியடையக்குடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன .எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார்.அதற்காக அவரைப்பாராட்டுகிறேன் .குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ,அத்வானி ,முரளிமனோகர் ஜோஸி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக்க் காரணமானவர்கள் என்றும் ஆர்எஸ்ஸ் ,சிவசேனா,பாரதியஜனதா ஆகிய அமைப்புகளைச்சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத்தரைமட்டமாக்கியுள்ளனனர்.என்றும் அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.


இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றிதெரிவிக்கும் வகையிலாவது ,இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இது முஸ்லீம்களுக்கு காங்கிர‌சு கட்சி துரோகமிழைத்தாக அமையும் ,

இந்த மண்ணில் ராமனின் பெயரால் ,பாபர் மசூதியைமட்டுமல்ல பெளத்த ,சமண மடங்களையும் காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்து தள்ளி ,அங்கே இந்து கோயில்களை எழுப்பியுள்ளனர் .ராமனின்பெயரால் சிவபக்தனான இராவணனையே அழித்துருக்கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கர‌வாதி என்று தெரிய வருகிறது .

அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத்தங்களைச் சொல்லிக்கொள்ளும் வாஜ்பாய் ,அத்வானி,ஜோஸி,போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உட‌னே கைதுசெய்ய வேண்டும்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டிடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது ,பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா ? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பாய் ,அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார்.அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகக் கூறுகிறார்.

எனவே இந்துத்துவப்பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் மதவெறியர்களுக்கு இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று கூறிநிறைவு செய்கிறேன்

நன்றி

தொல் .திருமாவளவன்


  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO